search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மோட்டார் சைக்கிள் விபத்து"

    நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூர் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 29). தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி காராமணிக்குப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையில் விபத்து ஏற்படாமல் இருக்க தடுப்பு கம்பி போலீசார் வைத்திருந்தனர். அதனை கடக்கும்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சதீஷ்குமார் தூக்கி வீசப்பட்டு சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சதீஷ்குமார் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    இந்த விபத்து காரணமாக கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தரியம்பட்டியை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மகன் ரேபக் (வயது 18). கூலித்தொழிலாளி. ரேபக் பூலாங்குறிச்சியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    பழைய காட்டாம்பூர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

    இந்த விபத்தில் ரேபக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரேபக்கின் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரேபக்கின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது.

    ×